01 January 2017

ஜொலிக்கும் அழகுக்கு வாழைப்பழத்தோல்

ஜொலிக்கும் அழகுக்கு வாழைப்பழத்தோல் 

அழகாக இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது,இதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவோம்.
பயன்படுத்த தொடங்கியதுமே நல்ல முடிவைத் தந்தாலும், பின்னாளில் பல்வேறு சரும பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இதற்குப் பதிலாக இயற்கையாக வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே பருக்களை போக்கலாம், இதற்கான தீர்வு தான் வாழைப்பழத்தோல் .


  • முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் தங்களின் முகத்தை முதலில் கழுவி விட்டு பின்பு வாழைப்பழத்தின் தோலை முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று இருக்கும்.
  • பழுத்த வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு 15 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் உங்களின் முகத்தின் கருமை நிறம் மாறுவதுடன் கரும்புள்ளிகளும் நீங்கும்.
  • வாழைப்பழத்தின் தோலில் விட்டமின் அ , ஆ, இ ,உ , இரும்பு சத்து , மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. இந்த சத்துக்களை நமது சருமம் உறிஞ்சிக்கொண்டு , முகத்தை பொலிவாக மாற்றுகிறது.

No comments:

Post a Comment