31 December 2016

பாரதியார் கவிதை -நல்லதோர் வீணை செய்தே


நல்லதோர் வீணை செய்தே 

நல்லதோர் வீணைசெய்தே 
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி-என்னைச் 
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ-இந்த  
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி- நிலச் 
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் 
வேண்டிய படிசெல்லும் உடலுக்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம் 
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ 
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவரு மதிகேட்டேன்-இவை 
அருள்வதில் உன்னக்கெதுந் தடையுள்ளதோ?