30 December 2016

பாரதியார் கவிதை -அச்சமில்லை


அச்சமில்லை 

அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே 
இச்சகத்து ளோரெலாம் 
எதிர்த்துநின்ற போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே ,
துச்சமாக எண்ணிநம்மைத் 
தூறுசெய்து போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே,
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை 
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே,
இச்சைகொண்ட பொருளெலாம் 
இழந்துவிட்ட  போதிலும் ,
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே,


கச்சணிந்த கொங்கை மாதர் 
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே,
நச்சைவாயி லேகொணர்ந்து 
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே,
பச்சையூ னியைந்தவேற் 
படைகள்வந்த போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே,
உச்சிமீது வானிடிந்து 
வீழுகின்ற போதினும் ,
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்ப தில்லையே,